புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ்
வென்ற டைட்டன்ஸ் அணி கேப்டன் ஜார்ஸ்வெல்டு பீல்டிங் தேர்வு செய்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் - பிஸ்லா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். பிஸ்லா 14 பந்தில் 27 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து மெக்கல்லம் களம் இறங்கினார். அதிரடியாக விளையாடிய மெக்கல்லம் 20 பந்தில் 36 ரன் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் தன் பங்கிற்கு 36 பந்தில் 44 ரன் எடுத்து அவுட் ஆனார். 7-வது வீரராக வந்த தாஸ் 19 பந்தில் 43 ரன் குவிக்க கொல்கத்தா அணி 188 ரன் எடுத்தது.

189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத டைட்டன்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தது. டைட்டன்ஸ் அணியால் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ரன் மட்டுமே எடுத்தது.

இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பாலாஜி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

ad

ad