புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் . இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்து வட கிழக்கு பருவமழையும் தொடங்கி பெய்து வருகிறது.
 
சென்னை நகரில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் மலை பிரதேசங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
செவ்வாய் கிழமை ஆயுதபூஜை, புதன்கிழமை விஜயதசமி என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ad

ad