புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2012

கேரளா நட்சத்திர ஓட்டலில் மரடோனா தங்கிய அறைக்கு திடீர் மவுசு

கடந்த வாரம் மரடோனா இந்தியாவுக்கு வந்தார். கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். கேரளாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 


மரடோனா, கண்ணூரில் உள்ள ‘புளூ நைல்’ 4 நட்சத்திர ஓட்டலில் அறை எண்.399-ல் தங்கி இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு இந்த ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார். ஏராளமான கால்பந்து ரசிகர்களையும் சந்தித்தார். 2 நாட்கள் தங்கிய பின்பு சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 

மரடோனா அறையை காலி செய்த பின்பு அந்த அறைக்கு திடீர் மவுசு ஏற்பட்டு உள்ளது. அவர் தங்கியிருந்த 399-ம் எண் அறையில் தங்கிச் செல்ல கால்பந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

தற்போது கத்தாரைச் சேர்ந்த கால்பந்து ரசிகர் மற்றும் தொழில் அதிபரான ஒருவர் மரடோனா தங்கியிருந்த அறையில் தங்கி இருக்கிறார். இந்த அறையை அவர் முன்கூட்டியே புக் செய்துதான் தங்க முடிந்தது. 

அடுத்தடுத்து 399-ம் எண் அறை புக்கிங் ஆகி கொண்டு இருப்பதாக ஓட்டல் அதிபர் ரவீந்திரன் தெரிவித்தார். அந்த அறையில் மரடோனா தனது காதலியுடன் இருக்கும் போட்டோ ஒன்று உள்ளது. இந்த போட்டோவை மரடோனா கொண்டு வந்து இருந்தார். அறையை காலி செய்யும்போது அவர் மறந்து விட்டுச் சென்றாரா? அல்லது தன் நினைவாக விட்டுச் சென்றாரா? என்பது தெரியவில்லை.

மரடோனாவின் பேரன் பெஞ்சமின் போட்டோவும் அறையில் உள்ளது. இந்த போட்டோக்களை நிரந்தரமாக அறையிலேயே வைத்து இருப்பதாகவும் அறைக்கு மரடோனா மியூசியம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் ஓட்டல் அதிபர் ரவீந்திரன் கூறினார்.

ad

ad