பொலிஸார் என கூறி தமிழ் வியாபாரி வீட்டில் கொள்ளை
பொலிஸார் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 7 பேர் அடங்கிய குழு கிரேண்ட்பாஸ் டிமேல் தொடர்மாடி தொகுதியில் உள்ள தமிழ் வியாபாரியொருவரின் வீட்டில் சுமார் 40 பவுண் நகை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
நேற்றிரவு 10.15 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவு
ம் இது குறித்து தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பதாகவும் ஆமர் வீதி பொலிஸ் நிலைய அதிகாரி குறிப்பிட்டார்.