புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


ஆபாச காட்சிகளைக் கொண்ட இணையத்தளங்களுக்கு தடை
இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடங்கிய இணையத்தளங்களை தடைசெய்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பிலான ஆய்வினை சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆபாச இணையத்தளங்கள் தொடர்பில் பத்தரமுல்ல சிறுவர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன் பிரகாரம், 51 ஆபாச இணையத்தளங்கள் தொடர்பிலான தகவல்களை பத்தரமுல்ல சிறுவர் நீதிமன்றத்தில் முன்வைத்ததாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதேவேளை, 18 வயதிற்கு குறைவான யுவதிகளை பாலியல் நடவடிக்கைகளில் உட்படுத்துவதற்கு இடமளிக்கின்ற மற்றும் வாடகைக்கு அறைகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் விசேட சுற்றுநிருபம் ஒன்றிற்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad