புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


ஐ.நா.வின் அறிக்கை கிடைத்த பிறகே நடவடிக்கை! இந்திய அமைச்சர் தெரிவிப்பு!!

இலங்கை போரின் போது ஐ.நா. அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது குறித்து ஐ.நா.வின் உள்விவகாரத் துறை அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது, ஐ.நா.வின் உள் விசாரணை அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்னையில் சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது.
ஐ.நாவி.ன் அறிக்கை முழுமையாகக் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

ad

ad