புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2013



12 வயது மைனர் பெண்ணை கற்பழித்த 58 வயது சமையல்காரர்

சென்னையை சேர்ந்தவர் சீதாராம் (58). இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்றார் அங்கேயே தங்கி கைதேர்ந்த சமையல்காரர் ஆனார். வாராசி கூடா என்ற இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வருகிறார்.



இவரிடம் சீதாவல்மண்டி பகுதியைச் சேர்ந்த ஏழை குடும்பத்தினர் சமையல் பணி உதவியாளராக இருந்தனர். சீதாராம் சமையல் பணிக்கு செல்லும்போது இந்த குடும்பத்தினரை அழைத்து செல்வார். அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது மைனர் பெண் மீது சீதாராமின் காம பார்வை பட்டது.

அவளை தனது அறைக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக கற்பழித்தார். பின்னர் செலவுக்கு பணம் கொடுத்து இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இப்படி 4 மாதமாக சீதாராம் அந்த மைனர் பெண்ணை மிரட்டி தனது காம பசியை தீர்த்து வந்தார்.

இந்த நிலையில் மைனர் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நீண்ட நாட்களாகியும் குண மாகாததால் அவளை ஐதராபாத் ஆஸ்பத்திரியில் தாய் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தேகம் அடைந்து அவளிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சீதாராம் மிரட்டி கற்பழித்து வந்ததை சிறுமி கூறினாள்.

இதையடுத்து தலைமறைவான சீதாராமை போலீசார் கைது செய்தனர்.

ad

ad