மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!- யாழில் சம்பவம்
யாழ். நல்லூர் பிரதேசத்தில் தனது மகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
50 வயதான குறித்த நபர் 12 வயதுடைய தனது மகளையே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதா பொலிஸார் கூறினார்.
இம்முறைப்பாட்டினைத் தொடர்ந்து, யாழ்.பொலிஸார் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.