புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2013


முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!

ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?



 “.........அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.....” இவை ஆனந்த விகடன் சஞ்சிகையில் அதன் ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்த வரிகள். குறித்த வரிகள் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவர் மனதில் இருந்தும் மறக்க முடியாதவை. வித்தயா ராணி என்ற ஈழத்து
பெண் போராளி ஒருவர் தொடர்பில் வெளியாகிய பதிவினை அடுத்து எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து  ஆனந்தவிகடன் ஆசிரியர் எழுதிய பதிவின் சில வரிகள் அவை.

அந்த வரிகள் எழுவதற்கு ஆனந்தவிகடனுக்கு எழுந்த தேவை என்ன? அவர்கள் எழுதியதும் அவர்கள் எழுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் பெண் போராளி தொடர்பில் வெளியாகியிருந்த நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களும் உண்மையானவையா? என்பதற்கான ஆதாரங்களை மீண்டும் தேடியது தமிழ்லீடர். தமிழ்லீடரின் தேடலின் விளைவாய்.. ஆனந்தவிகடன் ஒரு பொய்யை நியாயப்படுத்த இன்னும் பொய் சொல்லப் புறப்பட்டிருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.

முன்னாள் பெண் போராளி தொடர்பிலான நேர்காணல் பதிவினை மேற்கொண்டிருந்த அருளினியன் தொடர்பிலான பல்வேறு விடயங்களை தமிழ்லீடர் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. எமக்கு கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் அருளினியன் என்கின்ற நபர் விகடனுடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்திருப்பதாக தெரியவருகின்றது.

மாணவ நிருபர் பகுதி ஊடாக ஆனந்தவிகடனில் சின்ன சின்ன விடயங்களை எழுதி வந்த அருளினியன் ஒரு கட்டத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தொடர்பிலான நேர்காணல் ஒன்று தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இதனை அடுத்து ஈழப்பிரச்சினைகள் குறித்த விகடன் பத்திகளுக்கு பொறுப்பான ஊடகர் அந்த விடயத்தினை பிரசுரிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதுடன், அதற்கான ஆதாரத்தினை அருளினியனிடம் கேட்டிருக்கின்றார்.  இதனிடையே இவர்களுக்கான தொடர்புகள் மின்னஞ்சல் ஊடாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. மின்னஞ்சல் ஊடாக ஆதார ஒலிப்பதிவினை அனுப்ப முடியாது என்று ஆனந்தவிகடன் நிர்வாகத்தினை நம்பவைத்திருக்கிறார் அருளினியன்.

குறித்த நேர்காணல்  வெளியாகியதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து அருளியனைத் தொடர்புகொள்வதற்கு முயன்ற நிர்வாகம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. விடகன் தொடர்புகொள்ளக்கூடிய அனைத்து வழிகளையும் மூடியிருக்கிறார் அவர். இதனை அடுத்து அதிர்ந்து போன ஆனந்தவிகடன்.. உடனடியாகவே தமது உயர் பீடத்தினைக் கூட்டி என்ன செய்வது என ஆராய்ந்திருக்கிறது.

தமது சஞ்சிகையில் வெளியாகிய பதிவு தவறானது என்பது வெளித் தெரியவந்தால், வாசகர்களின் வெறுப்பினைச் சம்பாதிக்க நேரிடலாம் என்றும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கும் ஆனந்தவிகடன் முற்பட்டிருக்கின்றது. அதன் தொடராகவே குறித்த பதிவினை நியாயப்படுத்தும் வகையில் ஆசிரியர் கருத்து என்ற பெயரில் செய்த தவறினை நியாயப்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது விமர்சனம் முன்வைத்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஒரு பதிவினை வெளியிட்டு விட்டார்கள். அது மட்டுமல்லாமல் அடுத்த வெளியீடுகளில் ஈழத்தமிழர் விவகாரத்தினையும் இலங்கை விவகாரத்தினையும் முக்கியத்துவப்படுத்தி பதிவுகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் “புலித்தடம் தேடி...”புறப்பட்டது.. விகடன் குழு. (மகா. தமிழ் பிரபாகரன் இலங்கைக்கான பயணம் மேற்கொண்டு பயணக் கட்டுரை ஒன்றை ஜூனியர் விகடனில் எழுத ஆரம்பித்திருக்கின்றார் குறித்த கட்டுரைக்கான தலைப்பு “புலித்தடம் தேடி...”)

2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்று மூன்று ஆண்டுகளான பின்னர் திடீரென்று “புலித்தடம் தேடி..” விகடன் குழுமம் புறப்பட்டதன் பின்னணி என்ன? என்பது தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். விகடன் நீண்ட ஊடகப் பாரம்பரியத்தினைக் கொண்டது என்றாலும் முன்னாள் பெண் போராளி விடயத்தில் நடந்துகொண்ட சின்னத்தனமான செயற்பாட்டினால் அது தனது வரலாற்றுப் புத்தகத்தில் அழிக்கமுடியாத வடுவினை பதித்துவிட்டிருக்கின்றது என்பதே உண்மையானது.

தவறு நடைபெற்றிருக்கின்றது, உண்மைக்கு புறம்பான விடயம் வெளியாகியிருக்கின்றது என்பதை அறிந்த பின்னரும் அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ, அதற்காக பகிரங்க மன்னிப்புக்கோரவோ முற்படாத விகடன், தான் வெளியிட்ட ஆசிரியர் குறிப்பில் செருக்குத்தனமான எழுத்து நடை வெளிப்பட்டிருந்தமையை தமிழ் உணர்வாளர்கள் எவரும் என்றும் மறக்கப்போவதில்லை.

ad

ad