புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013


ரிசானாவுக்கான மரண தண்டனையை சவூதி நீதிமன்றம் உறுதி செய்தது
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசானா நபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவூதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டொக்டர் ஹிபாயா இஃப்திகர் தெரிவித்துள்ளார்.
முன்னர் ரிசானாவுக்கு மரண தண்டனையை வழங்கிய சவூதி நீதிமன்றம், தற்போது அந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளதாக டொக்டர் ஹிபாயா இப்திகார் குறிப்பிட்டுள்ளார். இந்த மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அது எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.
ரிசானா நபீக்கின் விடுதலைக்காக இறுதிக்கணம் வரை போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இலங்கை அரசாங்கமும், ரிசானாவுக்காக செயற்படுபவர்களும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ரிசானாவுக்கு மரணதண்டனையை விதித்த சவுதி நீதிமன்றம், அவரால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் சவூதி பெற்றோர் மன்னிப்பளித்தால் அவருக்கு விடுதலை வழங்கலாம் என்று கூறியிருந்தது.
ஆனால், அவர்கள் இதுவரை அப்படியான மன்னிப்பை வழங்காத காரணத்தால், தற்போது அது அந்த தண்டனையை உறுதி செய்துள்ளதாக டொக்டர் ஹிபாயா தெரிவித்துள்ளார்.

ad

ad