புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013

ரஷ்யாவில் விழுந்தது விண்கல்: 500 பேர் படுகாயம்-வீடியோ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 1,500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செலியாபின்ஸ்க் பகுதியில், விண்கல் விழுந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கொண்டதாக உள்ள விண்கல், இன்று இரவு பூமியை கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில் அக்கல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்கல் விழுந்தநேரத்தில் மிகப்பெரிய வெடி சப்தம் கேட்டதாகவும் புகைமண்டலத்துடன் கூடிய தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
யூரல் என்ற பகுதியில் விழுந்த விண்கல் காரணமாக வீடுகளில் உள்ள கண்ணாடிகள் மற்றும் மேற்கூரைகள் விழுந்தன. இதனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். மேலும் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

ad

ad