புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்றது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமான இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இந்த நேரத்தில் நடைபெற்ற இக்கூட்டம் மிக எதிர்பார்ப்புடையதாக அமைந்திருந்தது.
மாகாணத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருதல், கூட்டமைப்பில் ஒரு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தல் தொடர்பான விடயங்கள் இக்கட்சியின் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாக ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏனைய மாதாந்தக் கூட்டங்களைப் போலல்லாது இக்கூட்டம் பல தரப்பினராலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
வடக்கு மாகாண சபைக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பிலான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டிய முக்கிய கூட்டமாக இக்கூட்டம் கருதப்படுகின்றது.

ad

ad