புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

அரச சார்பற்ற அமைப்பு நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறத!- ஐநாவில் இலங்கை
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தெளிவான ஓழுங்குகள் அவசியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது
இது நாட்டின் இறைமைக்கும் கௌரவத்துக்கும் பாதுகாப்பாக அமையும் என்று இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள்; மனித உரிமைகள் அவையில் நேற்று இடம்பெற்ற சமதானம் தொடர்பான அமர்வின் போது இலங்கை இந்த கோரிக்கையை விடுத்தது.
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு கிடைக்கும் நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. 

ad

ad