புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013



கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 539 வன்னி தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வட மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் விக்னேஸ்வரன், கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல், வட மராட்சி வலய கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எனினும் குறித்த நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad