புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2013

உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்!- ஆங்கில இணையம்
இலங்கையின் உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஆங்கில செய்தி இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது பிரதம நீதியரசராக உள்ள மொஹான் பீரிஸ் முன்னர், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசராக செயற்பட்;டு வந்தார்.
இந்தநிலையில் அவரை பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையை குறிப்பாக உயர்நீதிமன்றத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தல் நிறுவன வழக்கு ஒன்று அண்மையில் இடம்பெற்றபோது கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே குறித்த நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணிகளை நியமித்துள்ளார்.
அத்துடன் அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளின் போது மொஹான் பீரிஸும் கோத்தபாய ராஜபக்சவும் சந்திப்புக்களை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தமை மற்றும் அதற்காக புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமித்தமை என்பன கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்றதாக ஆங்கில இணையச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad