புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

வெற்றி வாகை சூடியது யாழ். இந்து

இந்துக்களின் பெரும் போரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி
அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி நேற்று யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில்
களத்தடுப்பை தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி  200 ஓட்டங்களுக்கு
அனைத்து விக்கெற்றினையும் இழந்தது 39.3 ஓவர்களில் ஆட்டத்தினை நிறைவுசெய்துகொண்டது.


இதனை எதிர்த்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  யாழ்.இந்துக் கல்லூரி அணி 192 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டினை
இழந்து 48 ஓவர்களில் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் காலை ஆரம்பமாகிய நிலையில்  யாழ்ப்பாணம்  இந்து
கல்லூரி அணி 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றினையும் இழந்தது.


இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு இந்துக்கல்லூரி   95 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும்
இழந்ததுடன் யாழ் இந்துவுக்கு 21 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்படி யாழ் இந்து கல்லூரி துடுப்பெடுத்தாடி  இலகுவாக இலக்கை அடைந்து வெற்றி வாகை சுடியது.

இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு இந்துக்கல்லூரி   95 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும்
இழந்ததுடன் யாழ் இந்துவுக்கு 21 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்படி யாழ் இந்து கல்லூரி துடுப்பெடுத்தாடி  இலகுவாக இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியது.

ad

ad