புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014


சட்டவிரோத செய்மதி தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் செய்மதித் தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்திடம் உரிய அனுமதியை பெற்றுக் கொள்ளாது இந்த சட்டவிரோத செய்மதி கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரில் இந்த கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 500 ரூபா மற்றும் 1000 ரூபா அறவீடு செய்து சேவையை வழங்கியுள்ளார். சந்தேக நபரின் நிறுவனத்தில் காணப்பட்ட சகல விதமான இலத்திரனியல் சாதனங்களையும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளின் பிரதான நகரங்களில் இவ்வாறான கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் சில அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும், ஏனையவை அனுமதி பெற்றுக்கொள்ளாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad