புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

அகதிகள் 153 பேர் தொடர்பில் ஆஸி. அரசு பதில் மனு 
 இலங்கை அகதிகள் 153 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

 
அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு எதிராக அகதிகள் அந்நாட்டு உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். 
 
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அண்மையில் கைது செய்யப்பட்ட 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களையும் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதித்திருந்தது. 
 
மூன்று நாட்களுக்கு அரசாங்கத் தரப்பு நியாயங்களை விளக்கும் வகையில் பதில் மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. 
 
இந்த நிலையில் அதற்கு அமைய இன்றைய தினம் அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக பதில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. 

ad

ad