புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014


சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் முழுவதும்திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்!சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயகுமார்,
சுனாமி நிவாரண திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் முறையாக செயல்படுத்தவில்லை என்று புகார் கூறினார்.

இதனையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் வந்து சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். அமைச்சர் உதயகுமாரின் குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தினர். தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றே தமிழக சபாநாயகர் செயல்படுகிறார் என்றும் சபாநாயகர் சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார் என்றும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ad

ad