புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014

சினிமா நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகரின் விளக்க மறியல் நீடிப்பு
சிங்கள சினிமா நடிகை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகர் ஒருவரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பலவந்தமான முறையில் ஜீப் வண்டியில் ஏற்றி குறித்த நடிகையின் கைகளை கழுத்துப் பட்டியினால் கட்டி, வாகனத்திற்கு உள்ளேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக நடிகை குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க ஊடகமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் துணை முகாமையாளர்களில் ஒருவரும் ஜனாதிபதி ஆலோசகருமான முதியன்சலாகே சமன் திஸாநாயக்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.
பத்தரமுல் சத்சிறிபாயவிற்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து குறித்த நடிகை பலவந்தமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad