புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2015

மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்க ஆராச்சி தாக்கல் செய்த செய்த வழக்கு ஒன்றுக்கு அமையே முன்னாள் ஜனாதிபதி உட்பட 4 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜாதா அழகபெரும இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

ad

ad