புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

மஹிந்த ராஜபக்ச, கொலன்ன தொகுதியில் இருந்து பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி கொலன்ன தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சக்கரம் சின்னத்தின் கீழ் அவர் போட்டியிடவுள்ளதாக இலங்கையின் ஆங்கில இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் சின்னமான சக்கர சின்னத்தின் கீழேயே மஹிந்த ராஜபக்ச போட்டியிடவுள்ளார்.
இதேவேளை மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை தொகுதியில் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட கொலன்ன தொகுதியில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது அவருடைய குடும்பத்தினருக்கும் கொலன்ன தொகுதிக்கும், அவருக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
எனினும் 1970களில் மஹிந்த ராஜபக்ச, இளம் சட்டத்தரணியாக கொலன்னா நீதிமன்றத்திலேயே பயிற்சி பெற்றார் என்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மக்கள் ஐக்கிய முன்னணி 1956ம் ஆண்டு எஸ் டபில்யூ ஆர் டி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

ad

ad