புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் ஷிகர் தவான்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடியது. பி பிரிவுக்கான இந்த லீக் ஆட்டம் செவ்வாய்க்கிழமை காலை நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 260 ரன் இலக்கை நோக்கி விளையாடியது இந்திய அணி.

இதில் 84 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சதம் எடுத்தார் ஷிகர் தவான். அப்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து விளையாட தயாரானார். இந்தநிலையில் சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் ஷிகர் தவான்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது சதத்தை எடுத்தார். ஒரு தின போட்டியில் இதுவரை 8 சதம் எடுத்துள்ளார். 

ad

ad