புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தா

மக்கள் சேவையை மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அனைவரும் உண்மையுடனும் நேர்மையுடனும்
அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (09.03.2015)
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கையில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தேசிய நிறைவேற்றுச் சபையிலும் அங்கம் வகித்து வரும் நிலையிலும் இச் சூழலை நன்கு பயன்படுத்தி மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால், மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கூட்டமைப்பினர் எவ்விதமான அக்கறையும் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே இந்நிலையில் அவர்களது விருப்பம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை விடுத்து தீராப்பிரச்சினையாக வைத்துக் கொள்வதையும் அதனூடாக தமது சுயலாப அரசியலையும் முன்னெடுப்பதையும் நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாம் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் கட்சி அமைப்பாளர்கள் மக்கள் சேவைகளை மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அனைவரும் உண்மையுடனும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமெனவும் இதனூடாகவே மக்கள்சேவையை முழுமைப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்தகால, நிகழ்கால அனுபவங்களை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்

ad

ad