புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது: கஜேந்திரகுமார்


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பொன்றைய யாழ்.ஊடக அமையத்தில் முன்னணி நடத்தியிருந்தது.
இதன்போது கலந்து கொண்டு அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ad

ad