புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2015

தமிழகம் முழுவதும் வைகோ மறுமலர்ச்சி பயணம் : அண்ணாவின் இல்லத்தில் தொடங்குகிறார்


தமிழகம் முழுவதும் வைகோ மறுமலர்ச்சி பயணம் அக்டோபர் 3–ந் தேதி காஞ்சீபுரத்தில் தொடங்குகிறார்

ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கலிங்கப்பட்டியில் கடந்த 22–ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் மறுமலர்ச்சிப் பயணத்தின் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, அக்டோபர் 3–ஆம் தேதி காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பேரறிஞர் அண்ணாவின் இல்லத்தில் இருந்து வைகோவின் மறுமலர்ச்சிப் பயணம் வேன் பிரசாரமாக தொடங்குகிறது.

அக்டோபர் 3, 4–ந் தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 9, 10–ந் தேதிகளில் கரூர் மாவட்டத்திலும், 14, 15–ந் தேதிகளில் மதுரை மாவட்டத்திலும், 17, 18–ந் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திலும், 19, 20–ந் தேதிகளில் நெல்லை மாவட்டத்திலும், 21, 22–ந் தேதிகளில் குமரி மாவட்டத்திலும், 31–ந் தேதி மற்றும் நவம்பர் 1–ந் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்திலும், 2, 3–ந் தேதிகளில் தஞ்சை மாவட்டத்திலும் 4, 5–ந் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்திலும், 11, 12–ந் தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்திலும், மறுமலர்ச்சி பயணம் மேற்கொள்கிறார்.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பயணத்தை வெற்றிகரமாக்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமாறு கேட்டு கொள்கிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ad

ad