புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

நாடகமும் அரங்கியலும் செய்முறை வகுப்புகள்

இவ்வருடம் க.பொ.த  உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் பரீட்சைக்குத் தோற்றி, விரைவில் அதன் செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மா
ணவர்களுக்கான இருநாள் பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமையும், 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் இடம்பெறவுள்ளன. 
திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி வகுப்புக்கள் இரு நாட்களும் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரை நடைபெறவுள்ளதுடன், துறைசார்ந்த, தகுதிவாய்ந்த, வளவாளர்கள் இதனை நடத்தவுள்ளனர்.
இருநாள் பயிற்சி வகுப்புகளிலும் பங்குபெற்ற விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும், தமது பெயர் விபரங்களை 238, பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள்.

ad

ad