இலங்கையில் சிங்கள இராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது, சர்வதேச ஆதரவுடன் தமிழீழ இராஜ்ஜியத்தை உருவாக்க வழி வகுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. அறிக்கை எமக்கு முழுமையாக நம்பிக்கை தராவிட்டாலும், கலப்பு மற்றும் உள்ளக விசாரணை என வலியுறுத்தப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்க தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் உரையாற்றும்போதே, மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன போன்றவர்கள் உற்பட இடதுசாரிகள் இணைந்து நடத்திய பொதுக் கூட்டமொன்றில், தனிச்சிங்கள தேசத்தை உருவாக்குவோம் எனவும், அதற்காக சிங்கள கொடிகளுடன் அணிதிரள்வோம் எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு, பதிலளிக்கும் வகையிலே, மாவை சேனாதிராஜாவின் கருத்து அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.