புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2015

வீரவன்ஸ பிணையில் விடுதலை


செல்லுப்படியற்ற கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்ததால், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வீரவன்ஸ 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
டுபாய்,இங்கிலாந்து, இத்தாலி நாடுகளுக்கு செல்லும் நோக்கில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது வீரவன்ஸ கைது செய்யப்பட்டார்.
இது குறித்து தினேஸ் குணவர்த்தன பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, அவருக்கு தன் பயணத்தைத் தொடர அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடிவரவுத் திணைகக்ள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் விமல் வீரவன்சவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர் வெளிநாடு செல்ல முயன்றதே இதற்கான காரணமாகும்.
ஒரு கடவுச்சீட்டு காணாமல் போன நிலையில் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன கடவுச்சீட்டு மீண்டும் கிடைத்தாலும் அதனை குடிவரவுத்திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மற்றபடி அதனை பயன்படுத்துவது கடும் குற்றமாகும். இதனையே விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  விமல் வீரவன்சவிடம் வாக்குமூலத்தைப் பெற்றதையடுத்து அவரை கைது நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ad

ad