புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2015

முதல் ஆட்டத்திலேயே நாயகனான சிறிவர்த்தன

z_spo350
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்டு இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகனான
மிலிந்த சிறிவர்த்தனவுக்கு மத்தியூஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சிறிவர்த்தன தொடர்பாக மத்தியூஸ் தெரிவித்ததாவது -‘எங்களுக்கு திறமையான வீரர் கிடைத்துள்ளார். சிறிவர்த்தன துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் அதிகமாக பங்களிப்பு அளித்தார். அவர் கடந்த 2 மாதங்களாக ஒருநாள் ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.
இதனால் டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடித்தார். ஆனால் முதல் டெஸ்ட் தொடரிலே எந்த வித தயக்கமும் இன்றி அசத்திவிட்டார். இது போன்ற வீரரைத் தான் நாங்கள் எதிர் பார்த்தோம். நடுவரிசையில் ஆடவும் எங்களுக்கு சிறந்த வீரர் தேவைப்பட்டது. சில மாதங்களாக அவர் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்’ என்று தெரிவித் துள்ளார்.

ad

ad