புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2015

கட்டாரிலிருந்து வந்த இலங்கையரிடம் கொள்ளை....


வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையரிமிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்ட மூவர் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டாரிலிருந்து நாடு திரும்பிய பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை சிலர் நேற்றைய தினம் கொள்ளையிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு வானொன்றில் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபருடன் வானில் பயணித்தவர்கள், அவரிடமிருந்து ஒரு லட்சத்து 6ஆயிரம் ரூபா பணத்தையும், 20 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்களையும், நான்கு கைத்தொலைபேசிகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பொருட்கள் கொள்ளையிடப்பட்டதன் பின்னர் குறித்த நபர் வானில் வெளியில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த சந்தேகநபர்கள் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ad

ad