புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

ஐ.பி.எல்: 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். தொடரின் அரையிறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்
வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், மோர்கல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தனர். இதனையடுத்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஸ் குமார் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
ஐதராபாத் அணியில் 2 விக்கெட்டுக்களையும், 31 ஓட்டங்களையும் எடுத்த ஹென்ரிகியூஸ் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஐதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் தகுதிச் சுற்று 2 ஆட்டத்தில் குஜராத்துடன் மோதுகின்றது.
அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

ad

ad