புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில் வழக்குக்கான திகதிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அவர்களை விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமது விடுதலைக்காக போராடியவர்கள் தற்போது, நம்பிக்கை இழந்து உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் தமது விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுப்பதன் மூலமே இவர்களது விடுதலையை விரைவு படுத்த முடியும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

ad

ad