புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2016

இலங்கையில் தமிழர்களை கொலை செய்வதற்கு துணைபோன தி.மு.க! ஜெயா குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு தி.மு.கவினரே காரணம் என தமிழக முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா
குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லையில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு தி.மு.கவினரே காரணம். எனினும் இனப்படுகொலையை கண்டித்து அ.தி.மு.கவினரே சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கும் அவர்களே முன்னிற்று செயற்பட்டனர். இந்நிலையில், கச்சதீவினை மீட்பதற்கு அ.தி.மு.கவினரே முன்னிற்று செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போது தி.மு.க.வினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மீனவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.கவினரே பாடுபட்டனர்.
மக்களுக்கு திட்டங்களை தீட்டி தனது வருமானத்தை அதிகரித்துகொண்ட கருணாநிதி, தமிழ் மக்களின் நலனையும் அடகு வைத்துள்ளார்.
தனது ஆட்சி காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தி.மு.கவினர், பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக இருந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad