புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2016

இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரித்த பசிலின் மனைவி

பசில் ராஜபக்சவின் மனைவிக்கு ஊழல் மோசடி, மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம்
செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று சமூகமிக்கவில்லை.
இரண்டாவது தடவையாகவும் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தெஜனி ஆகியோர் தம்மால் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக முடியவில்லையென அறிவித்துள்ளனர்.
விமானப் படையினரின் விமானங்களை, தமது தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கடந்த 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளிலும் ஆணைக்குழுவுக்கு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் தாம் நாட்டில் இல்லாத காரணத்தினால் வரமுடியவில்லையென அவர்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர் என ஆணைக்குழுவின் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

ad

ad