புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2016

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சுவாதியை கொலை செய்த வாலிபர் அரிவாளால் வெட்டிய விதத்தை பார்க்கும் போது, துணிச்சலுடன் கொலைகளை செய்வதில் கைதேர்ந்தவனாக இருக்கலாம் என்றே போலீசார் கருதுகிறார்கள்.
பரபரப்பான ரெயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் வைத்து சுவாதியை அவன் வெட்டி கொன்றுள்ளான். அதற்காக புதிய அரிவாள் ஒன்றையும் கொலையாளி வாங்கியுள்ளான். தொழில் ரீதியாக கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களே திட்டம் போட்டு இதுபோன்று ஆயுதங்களை வாங்கி கொலை செய்வார்கள்.
எனவே சுவாதியால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்தான் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுவாதியை கொலை செய்யும் போது அந்த வாலிபர் சாதுரியமாகவும் செயல்பட்டுள்ளார். முன்பக்கமாக நின்று வெட்டினால் ரத்தக்கரை தனது உடலிலும் பட்டுவிடும் என்பதால் உஷாராக இருந்துள்ளான். பின்பக்கமாக நின்றபடியே சுவாதியை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளான்.
சுவாதியின் முகம் மற்றும் கழுத்து, தாடை பகுதிகளில் இருந்த காயங்களை பார்க்கும் போது பலமாக அரிவாளால் வெட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக கையில் அரிவாளை எடுக்கும் ஒருவரால் இதுபோன்று கோரமாக வெட்டி சாய்க்க முடியாது. எனவே கொலைக்கு அஞ்சாத கூலிப்படையை சேர்ந்த வாலிபர்தான் சுவாதியை துடிக்க துடிக்க வெட்டி கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் தென் மாவட்டங்களில் பயன் படுத்தப்படுவது போல இருக்கிறது. எனவே கொலையாளி நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்ட ரவுடிகள் மற்றும் கூலிப்படையினர் பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அதை வைத்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

ad

ad