புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2017

சற்றுமுன் அனுராதபுரத்தில் பயங்கர விபத்து! 38 பேர் மருத்துவமனையில்

அனுராதபுரம் – பாதெனிய வீதியின் கல்கமுவ , மஹகல்கடவில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கிரபாவ தொடக்கம் கல்கமுவ வரை ஆடை தொழிற்சாலையொன்றிற்கு ஊழியர்கள் ஏற்றி சென்ற பேரூந்தொன்றும் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து குருணாகலை நோக்கி பயணித்து பேரூந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப சிகிச்சைக்காக கல்கமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 பேரில், பலத்த காயங்களுக்கு உள்ளான 8 பேர் குருணாகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

ad

ad