புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2019

வரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ; சிறிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறியுள்ளார்.

நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்தை காப்பாற்றி வைத்திருப்பதாக கூறுவது உண்மையே. அதற்கு காரணம் இருக்கின்றது.

இப்போது இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்ஷதான் வருவார்.

ஆகவே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தவறினால் இந்த அரசாங்கம் கவிழும். அரசாங்கம் கவிழ்ந்தால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவார். நாங்கள் நடுநிலமை வகித்தாலும் அவர் வருவார்.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவதை எமது மக்கள் விரும்புவார்களா? ஆகவே நாங்கள் வரவு செலுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்.

எங்கள் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களை கொலை செய்து இந்த மண்ணிலே பெரிய இனப்படுகொலையை நடத்திய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நிற்கின்றார்.

ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற கனவை கோட்டாபய முதலில் விட வேண்டும். அங்தக் கொலைகாரன் ஜனாதிபதியாக வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.

ad

ad