புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2019

வலி.வடக்கில் 27.5 ஏக்கர் காணிகளை விடுவித்தது இராணுவம்!

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள பொதுமக்களின் 27.5 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தலைமையில், இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள பொதுமக்களின் 27.5 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தலைமையில், இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், குறித்த காணிகள், ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. ஆளுநர் அதனை, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கினார்.

2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை, யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த காணிகளில் 2,963 ஏக்கர் காணிகள், பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல காணிகள், படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளமையைக் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்

ad

ad