புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2019

புதிய அரசு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்

இலங்கையில் ஆட்சியமைக்க போகும் புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் ஆட்சியமைக்க போகும் புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லிணக்க முயற்சிகள் குறித்து நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, புதிய அரசாங்கத்தின் கீழ், உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறான விசாரணையில் சர்வதேச சமூகத்தை ஈடுபடுத்துவதா இல்லையா என்ற முடிவை இலங்கை அரசாங்கம் எடுக்கலாம். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மோதலிற்கு தீர்வை காணும் நடவடிக்கைகளை முழுமையாக்குவதற்காக தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் அவர்களிற்கு நீதி வழங்க வேண்டும். காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை ஏற்படுத்தியதன் மூலம் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் அவை தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.

நிரந்தர சமாதானத்திற்கான முக்கிய விடயம் நிலைமாற்றுக்கால நீதி. ஆனால் அரசாங்கம் இது குறித்து தீவிர ஆர்வத்தை கொண்டிருப்பதை நான் காணவில்லை.

விசாரணைகளை மேற்கொள்வதற்காக நான்கு வருடகால அவகாசத்தை பெற்றிருந்த இலங்கை அரசாங்கம் விசாரணை நடைமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும். சர்வதேச சட்டங்களை மதித்து இந்த விசாரணை நடைமுறைகளை ஆரம்பித்து பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியை வழங்குவது இலங்கைக்கு சிறந்த விடயமாக அமையும்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் புதிய அரசாங்கம் முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad