தெஹிவளை கடற்கரை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஒன்றுகூடிய இளைஞர்கள், யுவதிகள் போதைப்பொருளை பாவித்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், குறித்த இடத்திற்கு விரைந்து அங்கு சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதனையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.