புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2019

அதிரடி சுற்றிவளைப்பு; பேஸ்புக் மூலம் திரண்ட 100 பேர் கைது

தெஹிவளையில் பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை கடற்கரை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஒன்றுகூடிய இளைஞர்கள், யுவதிகள் போதைப்பொருளை பாவித்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், குறித்த இடத்திற்கு விரைந்து அங்கு சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதனையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ad

ad