அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மூன்றாவது பட்டியலிலும், நந்தசேன கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, கோத்தாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜையே என்றும், அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் அவரால் அந்தப் பதவியை வகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமையானது பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.