புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2020

ஹக்கீமும் சம்பந்தனும் இணைந்து புரியாணி சாப்பிட முடியுமென்றால் ஏன் கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து சாப்பிட முடியாது?

www.pungudutivuswiss.com
சுமந்திரன் எம்.பி போன்றவர்கள் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும். ஆனால் தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள். என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்முனை பிரச்சினையாக இருக்கட்டும் முஸ்லிம் தமிழ் பிரச்சினையாக இருக்கட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இரண்டு வகையான நிலைப்பாட்டினை எடுக்கின்றனர். ஒன்று மேடைகளில் பேசுகின்ற போது தமிழ் முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்பார்கள்.

கீழ் இறங்கி வருகின்ற போது தமிழ் முஸ்லிம் சமூகத்தினை எவ்வாறு பிரிப்பது என்ற பாங்கில் செல்வதை நாம் காண்கின்றோம். சுமந்திரன் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும். ஆனால் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இதனை நாம் பல தடவை கண்டுள்ளோம். நீங்கள் புரியாணி சாப்பிடும் போதாவது இதை பற்றி பேச முடியாதா?ஹக்கீமும் சம்பந்தனும் இணைந்து புரியாணி சாப்பிட முடியுமென்றால் ஏன் கல்முனையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து புரியாணி சாப்பிட முடியாது என்று நாங்கள் கேட்கின்றோம்.

மக்கள் மத்தியில் உசுப்பேத்த வேண்டும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அண்மையில் சுமந்திரன் கூறி இருந்தார். ஆனால் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே இவ்வித பிரச்சினையும் இல்லை. அரசியல்வாதிகள் தான் பிரச்சினையை தூண்டுகின்றனர் என்பதே எமது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad