போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
<<கடந்த மாதங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.>> என உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
மேலும், உள்துறை அமைச்சராக தாம் பொறுப்பேற்றதன் பின்னர் இதுவரை 3,952 போதைப்பொருள் விற்பனை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
<<காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் பிடிக்க வேண்டும். நான் இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் தொடர்புகொண்டு விசாரிப்பேன்!>> என Gérald Darmanin தெரிவித்தார்.
அதேவேளை, போதைப்பொருள் அதிகம் விற்பனையாகும் மாவட்டங்களில் Seine-Saint-Denis மாவட்டமே முன்னிலையில் உள்ளது எனவும், இங்கு இதுவரை 276 போதைப்பொருள் விற்பனை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகம் ஒன்றுக்கு உள்துறை அமைச்சர் வழங்கிய பேட்டியிலேயே மேற்படி தகவல்களை வெளியிட்டார்.