உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு இன்று ஜெய்ராம் (வயது 65) என்ற முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பலத்த மழை பெய்ததால், உடல் தகன நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட ஏராளமானோர் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் காங்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
சமீபத்தில் கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடம் பலத்த மழை காரணமாக பலவீனமடைந்து