புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2021

ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது - ஆதரவாளர்கள் முன்னிலையில் மு.க‌.அழகிரி பரபரப்பு பேச்சு

www.pungudutivuswiss.com
சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம் என்று ஆதரவாளர்கள் முன்னிலையில் மு.க.அழகிரி பேசினார்.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, வருகிற சட்டசபை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்றும், இது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறினார். அதன்தொடர்ச்சியாக மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி குறித்து ஆலோசனை கூட்டம் பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் மு.க.அழகிரி பேசியதாவது:-
சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம். கருணாநிதி, அன்பழகனுக்கு தெரியாமல் என்னை திமுகவில் இருந்து நீக்கினர். எந்த ஒரு பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு நீக்கினர். திமுகவுக்கு ஒரு சாதாரண தொண்டனாக பணியாற்றினேன்.
உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித்தந்ததே நான்தான். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார். கருணாநிதியிடம் நான் எம்பி பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்கவில்லை, அவராக கொடுத்தது.  ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது.
திருமங்கலம் இடைத்தேர்தல் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம், உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது. திருமங்கலம் பார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு.
திருமங்கலம் தேர்தலில் திமுக வெற்றிக்கு கலைஞரின் கடின உழைப்பு மட்டுமே பார்முலா வேறில்லை. திருமங்கலத்தில் பணம் கொடுத்து வென்றதாக கூறினார்கள் ஆனால் கடும் உழைப்பால் தான் வெற்றியை காட்டினோம்.
திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்க தவறி இருந்தால் திமுக ஆட்சியே அப்போது கையை விட்டு போயிருக்கும். திருமங்கலம் தேர்தல் என்றாலே இந்தியாவே திரும்பி பார்க்கிறது. பயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல, 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.
திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு மு.க.ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர். கலைஞர் கேட்டுக்கொண்டதால் தான் திருமங்கலம் தேர்தலில் நாம் பணியாற்றி 40,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். பல நேரங்களில் பல சோதனைகள் வந்தாலும் அதனை கடந்தும் வந்து இருக்கின்றோம்.
திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேற வில்லை.பேராசிரியர் க.அன்பழகனுக்கு தெரியாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கினர்.
எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்.  இப்போதும் நான் உங்களில் ஒருவன் மதுரை நமது கோட்டை இதை யாராலும் மாற்ற முடியாது.
பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு? ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள். ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad