2021 டிசம்பர் 20ம் திகதி வரையிலான தரவுகளின் படி, 4400 பேரில் 90 சதவிதத்திற்கும் மேற்பட்டோர், அட்லாண்டிக் பெருங்கடலில் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த 124 கப்பல் விபத்துக்களில் காணாமல் போனவர்கள். பயணத்தின் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க அமைக்கப்பட்டுள்ள உதவி எண் மூலம் இந்த தரவுகளை சேகரித்ததாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளாகும் ஒவ்வொரு படகு குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், கடலில் காணாமலாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டால் அவர்கள் இறந்துவிட்டதாக கருதப்படும் என Walking Borders தெரிவித்துள்ளது. ஸ்பெயின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஆண்டு சுமார் 39,000 புலம்பெயர்ந்தோர் வெற்றிகரமாக ஸ்பெயினை அடைந்துள்ளதாக காட்டுகிறது. |