புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2022

கோட்டா கோ கம இப்போது ரணில் கோ கம என பெயர் மாற்றம் – ரணிலின் கதையை முடிக்க தயாராகும் போராட்டக்காரர்கள்-

www.pungudutivuswiss.com
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தை விட்டு செயற்பாட்டாளர்கள் மக்கள் ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு வெளியேறும் வரை வெளியேறமாட்டார்கள் எனவும் அவருக்கு அந்தப் பதவியில் இருக்க உரிமையில்லை எனவும் போராட்ட களத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடல் கோட்டா கோ கமவின் பெயரை ரணில் கோ கம என மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கலின்போது ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளக் கூடாது எனவும் அவ்வாறு வழங்கினால் நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தமை வேடிக்கையானது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்ற ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் நிலைப்பாடு மாறவில்லை எனவும், பதில் ஜனாதிபதி பதவி விலகும் வரை அச்சமின்றி போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad