
ஈழத் தமிழர் சரித்திரத்தில் அதி உச்ச வரலாற்றுப் பதிவு
-----------------------------------------------------------------------
இலங்கை தமிழன் வெளிநாடு ஒன்றில் அமைச்சராக பதவி ஏற்கும் முதலாவது வரலாறு இதுவாகும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஹரியை பாராட்டி வாழ்த்துவோமாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர், கரி ஆனந்தசங்கரி சற்றுமுன்னர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பாரியளவில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளது.