யாழ் சாவகச்சேரியில் திகில் சம்பவம்: வாளுடன் பொலிசாரை துரத்திய இளைஞன் மடக்கி பிடிப்பு! 

போதைப்பொருள் வேட்டை
யில் ஈடுபட்டிருந்த பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய இளைஞன், இறுதியில் பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
யில் ஈடுபட்டிருந்த பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய இளைஞன், இறுதியில் பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது உடைமையிலிருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நாவற்குழி பகுதியில் மற்றொரு இளைஞனும் போதைப்பொருள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி பொலிசார் அங்கு சென்றபோது, அந்த இளைஞன் திடீரென வாளை எடுத்து பொலிசாரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனினும் வேகமாக செயல்பட்ட பொலிசார், வாளுடன் இருந்த இளைஞனை மடக்கி பிடித்து, அவரது உடைமையிலிருந்தும் போதைப்பொருள் மீட்டுள்ளனர்.
தற்போது இரு இளைஞர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
